ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பீட்சா, ஜிகர்தண்டா ஆகிய வெற்றிப்படங்களை, இறைவி என்ற தோல்விப் படத்தையும் இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், தற்போது உருவாகி வரும் படம் 'மெர்குரி'. பிரபுதேவா நாயகனாக நடிக்கும் இப்படத்தில் சனந்த் ரெட்டி, தீபக் பரமேஷ், ரம்யா நம்பீசன் உட்பட பலர் நடிக்கின்றனர். திரு ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
மெர்குரி படத்தின் சிறப்பு என்ன தெரியுமா? இந்தப்படத்தில் வசனங்களே இல்லை, முழுக்க முழுக்க வசனமே இல்லாத ஊமைப்படமாக உருவாக்கி வருகிறார் கார்த்திக் சுப்புராஜ். கமல் நடிக்க, சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் புஷ்பக் என்ற படம் 1987 ஆம் வருடம் வெளிவந்தது. இந்தப் படத்தை தமிழில் 'பேசும் படம்' என்ற பெயரில் வெளியிட்டனர். பேசும் படம் போல் வசனமே இல்லாமல் கிட்டத்தட்ட 30 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அதைப்போன்ற ஒரு முயற்சியில் இறங்கியிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.
இந்தப்படத்தில் பிரபுதேவா ஹீரோ இல்லை, ல்லத்தனம் காட்டி நடித்திருக்கிறாராம் பிரபுதேவா. த்ரில்லர் வகைப்படமான 'மெர்குரி'யின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. வசனம் இல்லாத படமாக இருந்தாலும் மெர்குரியில் சவுண்ட் எபெக்ட்டுக்கும், பின்னணி இசைக்கும் முக்கியமான பங்களிப்பு இருக்கும் என்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.