மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? |
தமிழ் சினிமாவில் விஜயகாந்த் மாதிரி சுமார் இருபது வருடங்களுக்கு மேலாக மலையாள சினிமாவில் சாசனம் எழுதிக் கொடுத்தது போல போலீஸ் அதிகாரி கேரக்டர்களை குத்தகைக்கு எடுத்திருந்தவர் சுரேஷ்கோபி மட்டுமே. மற்றவர்கள் எல்லாம் நான்கு வருடத்திற்கு ஒருமுறை போலீஸ் கேரக்டரில் நடித்தால் இவர் வருடத்திற்கு நான்கு போலீஸ் படங்களில் நடித்தார்.
சினிமாவில் சுரேஷ்கோபி நுழைவதற்கு முன் அவரை போலீஸ் அதிகாரியாக்கி அழகு பார்க்க வேண்டும் என்பது தான் அவரது தந்தையின் விருப்பமாக இருந்தது. அதற்கான தேர்வுகளையும் சுரேஷ்கோபி எழுதினார். தந்தை சினிமா டிஸ்ட்ரிபியூட்டர் என்பதால் தனது செல்வாக்கை பயன்படுத்தி போலீஸ் வேலையையும் அவர் எளிதாக வாங்கி தந்திருப்பார்.
ஆனால் சுரேஷ்கோபியின் நாட்டமெல்லாம் சினிமாவில் இருந்ததால், அவரது தந்தை, மகன் பற்றிய தனது ஆசையை மனதிற்குள் புதைத்துக்கொண்டார். ஆனாலும் அந்த போலீஸ் யூனிபார்ம் சுரேஷ் கோபியை விட்டபாடில்லை. கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் குறையாத படங்களில் போலீஸ் அதிகாரியாக, மகன் நடித்ததை பார்த்து திருப்திப்பட்டுக்கொண்டார் அவரது தந்தை.