ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
சினிமாவில் காதல் திருமணம் செய்து ஆதர்ஷ தம்பதிகளாக கிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள் குடும்பம் நடத்திய திலீப்-மஞ்சு வாரியர் பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்த கதை நாடறிந்தது. அதன்பின் இருவரும் ஒருவரைப்பற்றி மற்றவர் குறைகூறுவது போன்ற எந்த ஒரு செயலையும் மேற்கொள்ளவில்லை.. அவ்வளவு ஏன் சினிமா நிகழ்சிகளில் கூட, இருவரும் நேருக்கு நேர் சந்தித்துக்கொள்வதை தவிர்த்தனர்.. தற்போது நடிகை விவகாரத்தில் சிறையில் இருக்கும் திலீப் பற்றி ஒரு வார்த்தை கூட இதுவரை மஞ்சு வாரியர் வாய் திறக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் நீண்ட நாள் காத்திருப்பை தொடர்ந்து திலீப் நடித்துள்ள 'ராம்லீலா' படம் வரும் செப்-28ல் ரிலீசாக இருக்கிறது. ஆனால் ஆச்சர்யமாக அதே தேதியில் தான் மஞ்சு வாரியர் நடித்துள்ள 'உதாகரணம் சுஜாதா' படமும் திரைக்கு வர இருக்கிறது. கடந்த 2015 கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது திலீப் நடித்த '2 கண்ட்ரீஸ்' படமும் மஞ்சு வாரியர் நடித்த 'ஜோ அன்ட் தி பாய்' என்கிற படமும் ஒன்றாக ரிலீஸாகின.. ஆனால் அதில் திலீப் படம் தான் வெற்றி பெற்றது.. இப்போது இரண்டு வருடங்கள் கழித்து இருவரது படங்களும் ஒரே தேதியில் மோதும் சூழல் உருவாகியுள்ளது. ரசிகர்களின் தீர்ப்பு என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.