ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
எம்.ஜி.ஆரிடம் இருந்த சில முக்கியமான பாலிசிகளில் ஒன்று டப்பிங் படங்கள். அவர் தனது படங்களை டப் செய்வதை எப்போதும் விரும்புவதில்லை. ஆனால் அது தயாரிப்பாளர்களின் உரிமை என்பதால் எதுவும் சொல்வதில்லை. எம்.ஜி.ஆருக்கு பிடிக்காது என்பதால் எந்த தயாரிப்பாளரும் அவரது படத்தை டப் பண்ண மாட்டார்கள். தனது குரலுக்கு இன்னொருவர் இரவல் குரல் கொடுப்பது எம்.ஜி.ஆருக்கு பிடிக்காது என்பதே இதற்கு காரணம். இதன் காரணமாக நெருங்கிய நண்பர்களாக இருந்த எம்.ஜி.ஆரும், சாண்டோ சின்னப்பா தேவரும் பிரிந்த நிகழ்வு உண்டு.
சொந்தமாக படம் தயாரிக்க விரும்பிய தேவர் தனது ஆசையை எம்.ஜி.ஆரிடம் சொன்னார். எம்.ஜி.ஆரும் நானே நடித்து தருகிறேன் என்றார். அந்தப் படம்தான் தாய்க்கு பின் தாரம். பானுமதி, பாலையா, கண்ணாம்பா உள்பட பலர் நடித்தார்கள். தேவரின் தம்பி எம்.ஏ.திருமுகம் இயக்கினார். படம் வெளிவந்து பெரிய வெற்றி பெற்றது.
இந்தப் படத்தை தெலுங்கில் டப் செய்து வெளியிட விரும்பினார் நாகிரெட்டி. தேவரும் அதற்கான உரிமத்தை வழங்கி விட்டார். படம் தெலுங்கில் வெளியாகி அங்கும் வெற்றி பெற்றது. இதை கேள்விப்பட்ட எம்.ஜி.ஆர், தேவருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். என் நடிப்புக்கு எப்படி இன்னொருவரை பேச வைக்கலாம் என்பதே அந்த நோட்டீசின் சாராம்சம். அதன் பிறகு அந்த நோட்டீசை எம்.ஜி.ஆர் வாபஸ் வாங்கினாலும் எம்.ஜி.ஆரும், தேவரும் பிரிந்தார்கள். பின்னர் இருவரும் ஒரு சந்தர்ப்பத்தில் இணைந்து எம்.ஜி.ஆரை வைத்து தேவர் 16 படங்கள் தயாரித்தது தனிக் கதை.