ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
'குத்தீட்டி கண்ணுல குறுகுறுன்னு பார்க்குற சப்பாத்தி கள்ளியை சம்பங்கியா மாத்துறே...' என 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' படத்தில் கிளாமரில் கலக்கி, 'ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான்
சுகம் சுகம்...' என்று 'மொட்டை சிவா கெட்ட சிவா'வில் ஆடி அசத்திய நிக்கி கல்ராணி மனம் திறந்து பேசிய நிமிடங்கள்...
* 'நெருப்புடா' படத்தில் உங்கள் கேரக்டர்?
மருத்துவ கல்லுாரி மாணவியாக வருகிறேன். என் அம்மாவுக்கு நான் டாக்டர் ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதனால் தான் நான் அறிவியல் பாடம் எடுத்து படித்தேன், ஆனால் திசை மாறி சினிமாவுக்கு வந்து விட்டேன், இதுவும் நல்லது என நினைக்கிறேன்.
* விக்ரம் பிரபு பற்றி ?
ஷூட்டிங் ஸ்பாட்டில் ரொம்ப அமைதியானவர். இந்த படத்திற்கு தயாரிப்பாளராக இருந்தாலும் அதிகம் அலட்டிக் கொள்ளாமல் சாதாரண நடிகராகவே இருந்தார். மரியாதையாக, அன்பாக பழகுவது விக்ரம் குடும்பத்துக்கே உரிய தன்மை என்று நினைக்கிறேன்.
* இந்த படம் எந்த வகையில் உங்களுக்கு புதுசு ?
நெருப்போட விளையாடி இருக்கேன், இப்போது வரை இந்த மாதிரி படங்களில் நான் நடிக்கவில்லை. 'நெருப்புடா' படத்தில் 'ரிஸ்க்' எடுத்திருக்கேன், என்னோட அறிமுகமே நெருப்பில் இருந்து தான் தொடங்கும்.
* உங்கள் கதை தேர்வு ?
பலரும் யோசிக்கும் கதையை நான் செய்ய விரும்புவேன். அந்த சவால் எனக்கு பிடிக்கும். அந்த மாதிரி கதைகள் தேர்வு செய்து நான் வெற்றியும் பெற்றிருக்கிறேன்.
*'மரகத நாணயம்' படத்தில் ஆண் குரலில் பேசியது ?
அதை மட்டும் ரகசியமாக வைத்து இருக்கிறேன். ஏன் என்றால் அப்போ தான் ஒரு 'சஸ்பென்ஸ்' இருக்கும். நிறைய பேர் படம் பார்த்து நான் ஆண் குரலில் பேசியதைத் தான் சொல்றாங்க
* வித்யாசமான கதைகளில் நடிப்பது...
கண்டிப்பா இப்போ நான் நடிக்கும் 'ஹர ஹர மகாதேவகி', 'கீ', 'பக்கா' படங்கள் எல்லாமே வித்யாசமாக இருக்கும். ஒரு படத்துக்கும் மற்றொரு படத்துக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும்.
* நீங்கள் இப்போது பிஸி நடிகை ஆகிவிட்டீர்களே ?
முதலில் நான் நடிகை ஆவேன்னு நினைக்கவே இல்ல. இவ்ளோ துாரம் வெற்றி பெறுவேன் என்று நினைக்கவே இல்லை. நான்கு தமிழ் படம், இரண்டு மலையாளம், தெலுங்கு என்று ரொம்பவே பிஸியாக இருக்கேன். ரசிகர்களின் அன்பும், பாராட்டும் எனக்கு பிடிச்சிருக்கு. அவங்க மட்டும் ஆதரவு கொடுக்கவில்லை என்றால் எனக்கு இந்த இடம் கிடைத்திருக்காது.
* உங்களை பார்த்து 'ஜி.வி' பயப்படுவாராமே ?
என்னால ரொம்ப அமைதியா இருக்க முடியாது. எல்லார்கிட்டேயும் கலகலன்னு பேசிகிட்டே இருப்பேன். மனுசுக்குள் எதையும் வைத்து கொள்ள மாட்டேன். 'ஜி.வி' மாதிரி சில பேர் அமைதியாக இருந்தால் நான் என்ன பண்ண முடியும்...