ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கடந்த பிப்ரவரி மாதம் வெளியான 'புக்ரி' படத்தை தொடர்ந்து நடிகர் ஜெயசூர்யா தற்போது 'புண்யாலன் பிரைவேட் லிமிடெட்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். 2013ல் ரஞ்சித் சங்கர் இயக்கத்தில் ஜெயசூர்யா நடித்து ஹிட்டான 'புண்யாலன் அகர்பத்தீஸ்' படத்தின் இரண்டாம் பாகமாக தற்போது 'புண்யாலன் பிரைவேட் லிமிடெட்' என்கிற படம் மீண்டும் இதே கூட்டணியில் உருவாகி வருகிறது.
இந்தப்படத்தில் சவுண்ட் எஞ்சினியராக ஜஸ்டின் ஜோஸ் என்பவர் பணியாற்றுகிறார்.. இவர் தான் பிரமாண்ட 'பாகுபலி' படத்திற்கும் சவுண்ட் மிக்ஸிங் பண்ணியவர். அதுமட்டுமல்ல பாஜிராவ் மஸ்தானி' படத்தின் சவுண்ட் மிக்சிங்கிற்காக தேசிய விருதும் பெற்றவர்.. ஆனால் இவற்றுக்கெல்லாம் முன்பே இந்தப்படத்தின் முதல் பாகமான 'புண்யாலன் அகர்பத்தீஸ்' படத்திலும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.