ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
'புலி முருகன்' பட இயக்குனரான வைசாக் அடுத்ததாக மம்முட்டி நடிக்கும் படத்தை இயக்கும் வேலைகளில் மும்முரமாக இருக்கிறார். இது ஒன்றும் புதிய படம் அல்ல ஏற்கனவே மம்முட்டியும் பிருத்விராஜும் இணைந்து நடித்த, வைசாக் இயக்கத்தில் வெளியான 'போக்கிரி ராஜா' படத்தின் இரண்டாம் பாகம் தான் இந்தப்படத்திற்கு 'ராஜா-2' என டைட்டில் வைத்துள்ளார்கள். முதல் பாகத்தில் மம்முட்டிக்கு ஜோடி எதுவும் கிடையாது. பிருத்விராஜுக்கு ஜோடியாக ஸ்ரேயா நடித்திருந்தார். 'புலி முருகன்' படத்தை தயாரித்த தோமிச்சன் முளகுபாடம் தான் அந்தப்படத்தை தயாரித்திருந்தார்.
தற்போது 'ராஜா-2' படத்தையும் இவர்தான் தயாரிக்க இருக்கிறார். 'ராஜா-2'வில் மம்முட்டி நடிப்பது உறுதியாகிவிட்டது. ஆனால் முதல் பாகத்தில் மம்முட்டியின் தம்பியாக நடித்த இந்தப்படத்தில் நடிப்பாரா என்கிற கேள்வி நீண்ட நாட்களாகவே இருந்து வந்தது. இந்தநிலையில் மம்முட்டியின் பிறந்தநாளான நேற்று அவருக்கு வாழ்த்து தெரிவித்த பிருத்விராஜ், மம்முட்டியுடன் இணைந்து நடிக்கும் நாளை ஆவலுடன் எதிர்பாத்துக்கொண்டு இருப்பதாகவும், தன்னால் நீண்ட நாட்கள் காத்திருக்க முடியாது என்றும் கூறியுள்ளார். இதிலிருந்து 'ராஜா-2'வில் பிருத்விராஜ் நடிப்பது உறுதியாகியுள்ளது.