சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
பழம்பெறும் நடிகர் அக்னினேனி நாகேஸ்வரராவ் அறக்கட்டளையின் சார்பில் ஆண்டு தோறும் சிறந்த திரைப்பட கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ஏஎன்ஆர் (அக்னினேனி நாகேஸ்வர ராவ்) விருது வழங்கப்பட்டு வருகிறது. இதனை அவரின் மகனும் நடிகருமான நாகார்ஜுனா தனது குடும்பத்தின் சார்பில் செய்து வருகிறார். கடந்த 2005ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த விருதை இதுவரை இந்தி நடிகர் தேவ் ஆனந்த், சபானா ஆஸ்மி, அஞ்சலிதேவி, வைஜயந்திமாலா, பாடகி லதா மங்கேஷ்கர், கே.பாலச்சந்தர், ஹேமமாலினி, ஷியாம் பெனகல், அமிதாப்பச்சன் ஆகியோர் பெற்றிருக்கிறார்கள்.
இந்த ஆண்டுக்கான விருது பாகுபலி படத்தின் மூலம் இந்திய சினிமாவை உலக சினிமாவாக்கிய இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலிக்கு வழங்கப்படுகிறது. வருகிற 17ந் தேதி மாலை 4.30 மணிக்கு ஐதராபத்தில் உள்ள ஷில்பா கலா வேதிகா மன்றத்தில் நடக்கும் விழாவில் இந்த விருது வழங்கப்படுகிறது. துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு வழங்குகிறார். விழாவில் திரையுலக பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை நாகார்ஜுனா செய்து வருகிறார்.