ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகை கடத்தல் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளி பல்சர் சுனில், திலீப்பை தனக்கு நன்கு தெரியும் என்று கூறி அவரை சிறைக்கு அனுப்பினார். திலீப்பின் மனைவி காவ்யா மாதவனை 'மேடம்' என கூறி அவரையும் இந்த விவகாரத்தில் இழுத்துவிட்டுள்ளார் அதுமட்டுமல்ல, காவ்யா மாதவனிடம் தான் கார் டிரைவராகவும் இருந்ததாக கூறியுள்ளார். இந்தநிலையில் இரண்டு வருடங்களுக்கு முன் நடைபெற்ற காவ்யா மாதவனின் தம்பி மிதுன் மாதவன் திருமணத்தில் பல்சர் சுனில் கலந்துகொண்டார் என சோஷியல் மீடியாவில் கடந்த இரண்டு நாட்களாக பரபரப்பை கிளப்பி வருகிறது.
இந்தநிலையில் இந்த செய்தி குறித்து மிதுன் மாதவன் தனது பேஸ்புக் பக்கத்தில் விளக்கம் அளித்தார். அதில், “இந்தமுறை நாங்கள் யாரும் ஓணம் கொண்டாடவில்லை. ரொம்பவே கடினமான சூழ்நிலையில் இருக்கிறோம். எங்கள் குடும்பத்துக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத யாரோ ஒரு மூன்றாந்தர கிரிமினலான பல்சர் சுனில் தான் இதற்கு காரணம். இப்போது என் திருமணத்தில் அவர் கலந்து கொண்டார் என ஒரு பொய் செய்தியை பரவ விட்டுள்ளார்கள். அதற்கு ஆதாரம் என ஒரு போட்டோவையும் வெளியிட்டுள்ளார்கள். அவர் யாரென்றே தெரியாதபோது நாங்கள் எப்படி அவரை அழைத்திருக்க முடியும்.. போலீஸ் விசாரணையில் தெரிந்துவிடும் அது உண்மையா இல்லை என்று” என விளக்கம் அளித்துள்ளார்.