அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு |
நடிகை காரில் கடத்தப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் மலையாள நடிகர் திலீப், கடந்த 2 மாதங்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்டுள்ள திலீப் பலமுறை ஜாமின் கேட்டு மனுதாக்கல் செய்தும், அவருக்கு ஜாமின் தர கோர்ட் மறுத்து விட்டது.
தொடர்ந்து நடிகை கடத்தப்பட்ட வழக்கில் நடத்தப்பட்ட விசாரணையில், திலீப் மற்றும் அவரது இரண்டாவது மனைவி காவ்யா மாதவன் தான் முக்கிய குற்றவாளிகள் என நிரூபிக்கும் வகையிலான சாட்சிகள், ஆதாரங்களை போலீசார் திரட்டி வருகின்றனர். இந்நிலையில், தனது தந்தையின் நினைவு தின சடங்கில் பங்கேற்பதற்காக பரோல் கேட்டு திலீப், சிறைத்துறை அதிகாரிகளுக்கு மனு அளித்திருந்தார்.
திலீப்பின் கோரிக்கையை ஏற்ற சிறை அதிகாரிகள் அவரை பரோலில் வெளியே விட அனுமதி அளித்துள்ளனர். இதனையடுத்து, இன்று (செப்.,6) 2 மணிநேரம் பரோலில், திலீப் சிறையில் இருந்து வெளியே வந்தார். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.
பின்னர் தந்தையின் நினைவுநாள் காரியங்களில் கலந்துகொண்ட திலீப், அதன்பின் காலை உணவையும் அங்கேயே முடித்தார். சரியாக 9.45 மணியளவில் மீண்டும் போலீஸ் காவலுடன் ஆலுவா சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார் திலீப்.. அவர் வந்து சென்ற இந்த இரண்டு மணி நேரத்தில் போன் பயன்படுத்தக்கூடாது என்றும், இந்த அனுமதியை தவறாக பயன்படுத்தக்கூடாது என்றும் உயர் அதிகாரியின் ஆலோசனையின்படி நடக்கவேண்டும் நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. திலீப்பும் அதன்படியே நடந்துகொண்டார்.