சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
நடிகை விவகாரத்தில் கைதாகி கடந்த ஒன்றரை மாதத்திற்கும் மேலாக சிறையில் இருக்கிறார் மலையாள நடிகர் திலீப். அவர் சம்பந்தப்பட்டது நடிகை விவகாரம் என்பதாலோ என்னவோ திரையுலகை சேர்ந்த யாரும் இதுவரை அவரை சிறையில் சென்று சந்திததாகவோ, ஆறுதல் கூறியதாகவோ தெரியவில்லை.. அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர்கள் கூட சிறைக்கு சென்று அவராய் சந்திக்கவில்லை. இந்தநிலையில் சில தினகளுக்கு முன் திலீப்பின் மனைவி காவ்யா மாதவனும் திலீப்பின் மகள் மீனாட்சியும் அவரை சிறைக்கு சென்று சந்தித்து வந்தனர்..
அதை தொடர்ந்து நடிகர் ஜெயராம் சிறையிலிருக்கும் திலீப்பை சந்தித்து ஓணம் வாழ்த்துக்களை கூறிவிட்டு பரிசளித்துவிட்டும் வந்துள்ளார். தடையை ஒருவர் உடைத்துவிட்டால், மற்றவர்களுக்கு அந்த பாதையில் செல்வது எளிது தானே. அந்தவகையில் மலையாள திரையுலக பிரபலங்களான இயக்குனர் ரஞ்சித்,, நடிகர்கள் ஹரிஸ்ரீ அசோகன், கலாபவன் சாஜன், சுரேஷ் கிருஷ்ணா உள்ளிட்ட சிலர் திலீப்பை சந்தித்து பேசிவிட்டு வந்துள்ளனர்.