மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
தமிழ்த் திரையுலகத்தில் 'மெர்சல்' போன்ற பிரம்மாண்டமான இசை வெளியீட்டு நிகழ்ச்சிகளை எப்போதாவது ஒரு முறைதான் பார்க்க முடியும். வருடத்திற்கு ஒன்றிரண்டு அப்படி நடந்தாலே ஆச்சரியம்தான். ஆனால், தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களின் இசை வெளியீடு பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் முன்னிலையில் நடைபெறுவது வழக்கமாக இருக்கும்.
சில தினங்களுக்கு முன்பு பாலகிருஷ்ணா நடித்துள்ள 'பைசா வசூல்' படத்தின் இசை வெளியீடு தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கம்மம் நகரில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் போது பலத்த மழை பெய்தது. கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் மழையில் நனைவதைத் தவிர்க்க அவர்கள் அமர்வதற்காக போடப்பட்டிருந்த பிளாஸ்டிக் நாற்காலிகளை தலைக்கு மேல் தூக்கை வைத்து, மழையில் நனைவதில் இருந்து காத்துக் கொண்டார்கள். ஆனால், நிகழ்ச்சி முடிந்தும் மழை கொட்டியதால், அந்த நாற்காலிகளுடன் அப்படியே வீட்டிற்குப் புறப்பட்டுச் சென்றார்கள்.
நிகழ்ச்சிக்கு வந்த ரசிகர்கள் நாற்காலிகளைத் தூக்கிக் கொண்டு செல்லும் அந்த வீடியோ இப்போது யு டியூபில் வைரலாகப் பரவி வருகிறது. 'பைசா வசூல்' என்ற படத்தின் பெயருக்கேற்ப தயாரிப்பாளருக்கு படம் வெளியான பின் பைசா வசூல் ஆகிறதோ இல்லையோ, ரசிகர்களுக்கு நிகழ்ச்சிக்கு வந்ததால் 'நாற்காலி வசூல்' ஆனது.