ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து தமிழக அரசு மீதும், தமிழக அமைச்சர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார். இதுதொடர்பாக அவ்வப்போது தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்துக்களை பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
தமிழகத்தில் அதிமுக., அணிகள் குறித்த இணைப்பு நடந்துள்ளது. முதல்வர் பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அதிமுக., தலைமை அலுவலகம் வந்து கட்சிகள் இணைப்பை உறுதி செய்தனர். இந்நிலையில் கமல்ஹாசன் தற்போது ஒரு பரபரப்பான டுவிட்டர் பதிவை போட்டிருக்கிறார்.
கமல் பதிவிட்ட டுவிட்டர் பதிவு இதுதான்... "காந்திக் குல்லா! காவிக் குல்லா! காஷ்மீர் குல்லா!! தற்போது கோமாளிக் குல்லா, தமிழன் தலையில். போதுமா இன்னும் வேண்டுமா? தயவாய் வெகுள்வாய் தமிழா".
அதாவது, தமிழன் தலையில் கோமாளிக் குல்லா விழுந்துள்ளது, தமிழா எழுந்து வா... என்று கூறியிருக்கிறார்.