சூர்யாவின் 'புறநானூறு' தள்ளிப் போகிறதா? | ராம்சரணை தொடர்ந்து கியாரா அத்வானியின் கேரக்டர் லுக்கும் லீக் ஆனது | கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி |
நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து தமிழக அரசு மீதும், தமிழக அமைச்சர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார். இதுதொடர்பாக அவ்வப்போது தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்துக்களை பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
தமிழகத்தில் அதிமுக., அணிகள் குறித்த இணைப்பு நடந்துள்ளது. முதல்வர் பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அதிமுக., தலைமை அலுவலகம் வந்து கட்சிகள் இணைப்பை உறுதி செய்தனர். இந்நிலையில் கமல்ஹாசன் தற்போது ஒரு பரபரப்பான டுவிட்டர் பதிவை போட்டிருக்கிறார்.
கமல் பதிவிட்ட டுவிட்டர் பதிவு இதுதான்... "காந்திக் குல்லா! காவிக் குல்லா! காஷ்மீர் குல்லா!! தற்போது கோமாளிக் குல்லா, தமிழன் தலையில். போதுமா இன்னும் வேண்டுமா? தயவாய் வெகுள்வாய் தமிழா".
அதாவது, தமிழன் தலையில் கோமாளிக் குல்லா விழுந்துள்ளது, தமிழா எழுந்து வா... என்று கூறியிருக்கிறார்.