ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சில தினங்களுக்கு முன் பாலிவுட் நடிகர் ஷாருக்கான், மும்பை சேனல் ஒன்றின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில், தனது 'ஜப் ஹேரி மெட்' படத்தின் புரமோஷனுக்காக கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான கேரளாவை சேர்ந்த வி.ஜி என்கிற வைஷ்ணவ் கிரிஷ், ஷாருக்கானை மேடையில் வைத்து அனைவர் முன்னிலையிலும் அலேக்காக தூக்கி அதன்மூலம் பிரபலமானார். இதை தொடர்ந்து அவருக்கு அடுத்ததாக ஏ.ஆர்.ரஹ்மான் மூலமாக இன்னொரு ஜாக்பாட் அடித்துள்ளது..
தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில், அட்லீ டைரக்சனில், விஜய் நடித்துள்ள படம் 'மெர்சல்'. இது தேனாண்டாள் பிலிம்ஸின் 100வது படம் என்பதாலும் விஜய், ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோரின் திரையுலக வாழ்க்கையில் 25ஆம் ஆண்டு கொண்டாட்டம் என்பதாலும் வரும் ஆக-2௦-ஆம் தேதி நேரு ஸ்டேடியத்தில் இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிக பிரமாண்டமாக நடக்க இருக்கிறது. அப்போது இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ள ஏ.ஆர்.ரஹ்மான் லைவ் கான்செர்ட் நடத்த உள்ளார். அந்த லைவ் கான்செர்ட்டில் பாடுவதற்கு வைஷ்ணவ் கிரிஷுக்கும் வாய்ப்பு கொடுத்து அவரை இன்ப அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.