ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
சிரஞ்சீவி, விஜயசாந்தியைத் தொடர்ந்து பவன் கல்யாணும் சமீபத்தில்தான் முழுநேர அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்தார். அவர்களைத் தொடர்ந்து ரஜினியும் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், தற்போது கன்னட நடிகர் உபேந்திராவும் புதிய கட்சி தொடங்கயிருப்பதாக அறிவித்துள்ளார்.
கன்னடத்தில் ஏராளமான படங்களில் நடித்தவர் உபேந்திரா. தமிழில் விஷால் நடித்த சத்யம் படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் அவர் நடித்திருந்தார். தற்போது கன்னடத்தில் உப்பி ருப்பி -என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில்தான், கர்நாடகத்தில் வரப்போகிற சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக தனி கட்சி தொடங்கயிருப்பதாக அறிவித்துள்ளார் உபேந்திரா. மேலும், எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் தனித்து போட்டியிட்டு பலப்பரீட்சை காணப் போகிறாராம்.
இந்த தகவல் தற்போது ஒரு வீடியோவாக வெளியிட்டுள்ள உபேந்திரா, தன்னை மக்கள் தேர்ந்தெடுத்தால் ஊழலை ஒழிப்பதுதான் எனது முதல்வேலை என்றும் தெரிவித்துள்ளார்.