ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
காமெடி நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் தற்போது நடத்தி வரும் காமெடி நாடகம் சொப்பன வாழ்வில். ஒய்.ஜி.மகேந்திரனுடன் பிருந்தா, சுப்புணி, யுவஸ்ரீ உள்பட பலர் நடித்திருக்கிறார். கோபு பாபு கதை, வசனம் எழுதியுள்ளார், ஒய்.ஜி.மகேந்திரன் இயக்குகிறார். அப்பாவியான ஒருவனை இந்த சமூகம் அவமதிப்பதும், அந்த அப்பாவி ஒரு நாள் அடப்பாவியாகி தன்னை அவமதித்தவர்களை பழிவாங்குவததும் தான் கதை.
இந்த நாடகம் சென்னையில் தொடங்கி உலக நாடுகளுக்கும் சென்று வந்து விட்டது. இதுவரை 99 மேடையேறிவிட்ட இந்த நாடகம் வருகிற ஆகஸ்ட் 15ந் தேதி சுதந்திர தினத்தன்று 100வது மேடையேறுகிறது. ஒய்ஜிபி அரங்கில் இரவு 7 மணிக்கு நடக்கும் 100வது மேடையேறும் விழாவில் நடிகை சிம்ரன், நடிகர் பகத் பாசில், இயக்குனர் வசந்த், இசை அமைப்பாளர் தேவா உள்ளிட்ட பலர் கலந்து கொள்கிறார்கள். இதற்கு முன்பு ஒய்.ஜி.மகேந்திரன் நடத்திய காசேதான் கடவுளடா, வியட்நாம் வீடு, பரீட்சைக்கு நேரமாச்சு நாடகங்களும் 100 மேடைகளை தாண்டி நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.