ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கடந்த வருடம் மலையாளத்தில் பஹத் பாசில் நடித்த 'மகேஷிண்டே பிரதிகாரம்' படத்தில் ஜிம்ஸி என்கிற கேரக்டரில் நடித்திருந்த அபர்ணா முரளி, அந்த ஒரே படத்தில் ரசிகர்களின் மொத்த ஆதரவையும் தட்டிச்சென்றார்.
தமிழிலும் கூட இவர் நடிப்பில் வெளியான '8 தோட்டாக்கள்' என்கிற படத்திலும் இவரது நடிப்பு பாரட்டப்பட்டது. இந்த நிலையில் அபர்ணா பாலமுரளியின் படங்கள் அடுத்தடுத்து ரிலீசாகி வருகின்றன. அதில் அபர்ணாவின் நடிப்பும் பாராட்டை பெற தவறவில்லை.
கடந்த ஜூலை மாதம் அபர்ணா நடித்த சண்டே ஹாலிடே படம் ஹிட்டாகி தற்போது தமிழிலும் அந்தப்படத்தை ரீமேக் பண்ண இருக்கிறார்கள். கடந்த வாரம் அபர்ணாவின் இன்னொரு படமான 'சர்வோபரி பாலக்காரன்' படம் வெளியாகியுள்ள நிலையில் இன்றும்(ஆக.,11) அவர் நடித்த 'திருச்சிவபேரூர் கிளிப்தம்' என்கிற படம் ரிலீசாகியுள்ளது. இதில் ஆட்டோ டிரைவராக நடித்துள்ளார் அபர்ணா.
இதற்காக ஒரு வாரம் ஆட்டோ ஓட்டுவதற்கு பயிற்சி எடுத்துக் கொண்டதுடன் படத்தில் எந்தவித மேக்கப்பும் இல்லாமல் நடித்துள்ளாராம்.. இந்தப்படத்தின் கதாநாயகனாக நடித்திருக்கிறார் ஆசிப் அலி. இதே ஆசிப் அலியுடன் தான் கடந்த மாதம் வெளியான சண்டே ஹாலிடே படத்தில் அபர்ணா ஜோடியாக நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ரதீஷ்குமார் என்கிற அறிமுக இயக்குனர் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.