மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
முன்பெல்லாம் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்றால், அவற்றை தொகுத்து வழங்கினால் சினிமாவில் தங்களுக்கான இமேஜ் சரிந்துவிடும் என முன்னணி நடிகர்கள் பயந்த காலமும் உண்டு. ஆனால் இன்று சின்னத்திரையின் வீச்சு அதிகமென்பதால் மக்கள் மனதில் இடம்பிடிக்க கூடிய நிகழ்ச்சிகள் மூலம் சின்னத்திரைக்குள் நுழைவதால் இமேஜ் இன்னும் உயரவே செய்யும் என்பதை புரிந்துகொண்டார்கள் சில நடிகர்கள். ஆமீர் கான், சல்மான் கான், சூர்யா, சரத்குமார், சுரேஷ்கோபி ஆகியோர்கள் ரியாலிட்டி ஷோக்கள் மூலமாக சின்னத்திரைக்குள் வந்தது இப்படித்தான்.
தற்போது கடந்த ஒரு மாத காலமாக கமல், 'பிக் பாஸ்' நிகழ்ச்சி மூலமாக சின்னத்திரை ரசிகர்களை தன் வசம் இழுத்துக்கொண்டுள்ளார். இதனால் அவரது மதிப்பு இன்னும் உயரவே செய்துள்ளது என்பது கண்கூடு. அந்தவகையில் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலும் முதன்முதலாக சின்னத்திரைக்குள் அடியெடுத்து வைத்துள்ளார். அம்ரிதா டிவி என்கிற சேனலில் 'லால் சலாம்' என்கிற பொழுதுபோக்கு நிகழ்ச்சியை மோகன்லால் தான் நடத்த இருக்கிறார். விரைவில் துவங்கவுள்ள இந்த நிகழ்ச்சிக்கான லோகோவை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் மோகன்லால்.