ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
நடிகை விவகாரத்தில் கைதாகி தற்போது சிறையில் உள்ள மலையாள நடிகர் திலீப் பற்றி அவ்வப்போது புதுப்புது செய்திகள் வெளியாகி அவரது இமேஜை இன்னும் டேமேஜ் பண்ணிக்கொண்டு தான் இருக்கின்றன. அந்தவகையில் துபாயில் வேலைபார்க்கும் கேரளாவை சேர்ந்த இளைஞர் ஜாசிர் என்பவர் திலீப்பின் உதவியால் தனது கனவு எப்படி வீணாகிப்போனது என்பதை சோஷியல் மீடியாவில் வெளிப்படுத்தியுள்ளார். உதவி தானே செய்தார். பின் எப்படி இன்னொருவரின் கனவு வீணாகும் என்கிறீர்களா..? விஷயம் இருக்கிறது..
துபாயில் ஹோட்டல் ஒன்றில் டெலிவரி பாய் வேலைபார்க்கும் ஜாசிர், கடந்த வருடம் துபாய் சாலை ஒன்றில் விபத்தில் சிக்கினார். சின்ன விபத்துதான்.. அப்போது அந்த வழியாக நண்பர்களுடன் காரில் வந்த திலீப், ஜாசிரை போலீஸார் உதவியுடன் மருத்துவமனையில் சேர்த்தார். நண்பர்கள் மூலமாக மருத்துவமனைக்கே மீடியாக்களை வரவழைத்து இந்த உதவி பற்றி பேசி தனது இமேஜையும் தவறாமல் பில்டப் செய்து கொண்டார். அப்போது ஜாசிரிடம் அவரது வேலை விபரங்கள் எல்லாம் கேட்டு தெரிந்து கொண்டாராம். சில மாதங்கள் கழித்து தான் நடித்த 'கிங் லயர்' படப்பிடிப்புக்காக துபாய் வந்த திலீப், தனது நண்பரும் இயக்குனருமான நாதிர்ஷா மூலமாக ஜாசிரை 'கிங் லேயர் செட்டுக்கே வரவழைத்தாராம்.
ஜாசிரிடம் ஏன் இப்படி இங்கே இருந்து சிரமப்படுகிறாய் கேரளாவுக்கு வா.. நல்ல வேலையில் சேர்த்து விடுகிறேன் என வாக்கு கொடுத்தாராம். அதை நம்பி துபாய் வேலையை விட்டுவிட்டு கேரளா வந்த ஜாசிருக்கு, திலீப்பை தொடர்புகொள்ள போன் செய்து செய்து, நேரத்தை செலவழித்துதான் மிச்சம். திலீப்பிடம் இருந்தும் எந்த பதிலும் இல்லை.. வெறுத்துப்போன ஜாசிர் சில மாதங்கள் கழித்து மீண்டும் துபாய்க்கே சென்றவர், பழைய வேலையில் சேரமுடியாமல், தற்போது குறைவான சம்பளத்தில் ஒரு செக்யூரிட்டி நிறுவனத்தில் வேலைபார்க்கிறாராம்.
இந்த தகவல்களை தற்போது வெளியிட்டுள்ள ஜாசிர், திலீப்பை சந்தித்தால் நறுக்கென சில கேள்விகள் கேட்க விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.. “திலீப் ஸார்... அன்று நான் பார்த்துவந்த வேலையின் மூலமாக ஊரில் நாலு சென்ட் இடம் வாங்கியிருந்தேன்.. அதிலேயே தொடர்ந்திருந்தால் இப்போது ஊரில் நல்ல வீடே கட்டியிருப்பேன்.. சகோதரியின் திருமணத்தை இன்னும் ஜாம் ஜாம் என முடித்திருப்பேன்.. அன்றைக்கு மாதம் நான்காயிரம் திராம்கள் (70 ஆயிரம் ரூபாய்) டிப்ஸாக மட்டுமே கிடைத்தது.. இன்றைக்கோ ஆயிரம் திராம்கள் கிடைப்பதே அரிதாக இருக்கிறது. உங்களைப்போன்றவர்கள் உங்களது இமேஜை உயர்த்திக்கொள்வதற்காக என்னைப்போன்றவர்கள் வாழ்க்கையில் ஏன் விளையாடுகிறீர்கள்..?” என வேதனையுடன் பதிவிட்டுள்ளார் ஜாசிர்.