ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
போகும் இடமெல்லாம் பஹத் பாசிலின் பெருந்தன்மை பற்றி புகழ் பாடிக்கொண்டு இருக்கிறார் மலையாள சினிமாவின் காமெடி மற்றும் குணச்சித்திர நடிகரும் தேசிய விருது பெற்றவருமான சுராஜ் வெஞ்சாரமூடு. சமீபத்தில் பஹத் பாசில், சுராஜ் வெஞ்சாரமூடு இருவரும் இணைந்து நடித்த 'தொண்டிமுதலும் திரிக்சாட்சியும்' என்கிற படம் வெளியானது. இதில் கிட்டத்தட்ட ஹீரோ வேடத்தில் சுராஜும், பஹத் பாசில் இரண்டாவது ஹீரோ போலவும் நடித்திருந்தார்கள்.. பஹத் பாசிலுக்கு ஜோடி இல்லை, பாடல் இல்லை.. ஆனால் சுராஜுக்கு இந்த இரண்டுமே கிடைத்திருந்தது.
படத்தின் இயக்குனர் திலீஷ் போத்தன் முதலில் இந்த இரண்டு பேரின் கேரக்டரையும் மாற்றிக் கொடுப்பதாகத்தான் திட்டம் வைத்திருந்தாராம். ஆனால் 'ஆக்சன் ஹீரோ பைஜூ' படத்தில் சுராஜின் கண்கலங்க வைக்கும் நெகிழ்வான நடிப்பை பார்த்துவிட்டுத்தான், பஹத் பாசில் கேரக்டரை அவருக்கு கொடுத்தாராம்.. எந்த கேரக்டரை எனக்கு கொடுத்தாலும் சரி, அதில் நான் தனித்து தெரியும்படி பார்த்துக்கொள்வேன் என கூறிய பஹத் பாசிலும் பெருந்தன்மையுடன் தனது கேரக்டரை சுராஜுக்கு விட்டுக்கொடுத்தராம். ஒரு ஹீரோ, கதையின் தன்மை உணர்ந்து இந்த அளவுக்கு இறங்கிவருவது ரொம்பவே அரிதான விஷயம் என பஹத் பாசிலை பாராட்டுகிறார் சுராஜ் வெஞ்சாரமூடு.