ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
வளர்ந்து வந்த கன்னட இளம் நடிகர் துருவா சர்மா. இவர் நடிகை அபிநயா போன்று காது கேளாத வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. ஆனாலும் அது வெளியில் தெரியாத வண்ணம் மிக அற்புதகமாக நடித்து வளர்ந்து வந்தார். சிநேகாஞ்சலி, நீனந்தரரே நனகிஸ்டா, உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். பிசியாக நடித்தும் வந்தார். இவர் ஒரு கிரிக்கெட் வீரரும் கூட 2005ம் ஆண்டு நடந்த மாற்றுத் திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டு விளையாடினார்.
நேற்று வீட்டில் இருந்த சர்மா திடீரென மயங்கி விழுந்தார். அவரை குடும்பத்தினர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் துருவா ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். துருவாவின் திடீர் மரணம் கன்னட திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று அவரது உடலுக்கு சிவராஜ்குமார், பிரேம், யோகிஷ், ஜக்கேஷ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.
ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி வந்த துருவா, அதில் பெரும் நஷ்டத்தை சந்தித்தாகவும் இதனால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து யாரும் புகார் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றே துருவாவின் உடல் தகனம் செய்யப்பட்டுவிட்டது.