ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகரான சிரஞ்சீவி, கைதி எண் -150 படத்தைத் தொடர்ந்து, சுதந்திர போராட்ட வீரர் உய்யலவாடா நரசிம்ம ரெட்டி என்பவரின் வாழ்க்கை வரலாறு கதையில் நடிக்கிறார். இப்படத்திற்கு மகாவீரா என்று பெயரிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த படத்தை ஆகஸ்டு 15-ந்தேதி தொடங்க திட்டமிட்டுள்ளனர். லிங்கா படத்தை தயாரித்த ராக்லைன் வெங்கடேசுடன் இணைந்து சிரஞ்சீவியின் மகனான நடிகர் ராம்சரண் தயாரிக்கிறார்.
ரூ.125 கோடியில் தயாராகும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் உருவாகிறது. இந்த படத்தில் முக்கிய நாயகிகளாக நடிக்க ஐஸ்வர்யா ராய், நயன்தாரா ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால், இருவரும் பல கோடி சம்பளம் கேட்டதால் படத்தின் கதாநாயகிகள் யார் யார் என்பது முடிவுக்கு வரவில்லை.
அதனால், திட்டமிட்டபடி ஆகஸ்ட் 15-ந்தேதி படம் தொடங்கப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாம். அதேசமயம், வேறு சில முன்னணி நடிகைகளிடமும் தற்போது பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கிறாராம் ராம் சரண்.