14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
மோகன்லாலை வைத்து 'புலி முருகன்' என்கிற பிளாக் பஸ்டர் படத்தை தயாரித்த தோமிச்சன் முலக்குபாடம் அடுத்ததாக தயாரித்துள்ள படம் தான் 'ராம்லீலா'. கொஞ்ச நாட்களாக மலையாள சினிமாவின் டாப் நியூஸில் இடம்பிடித்துள்ள நடிகர் திலீப் தான் இதில் கதாநாயகனாக நடித்துள்ளார். பிரயாகா மார்ட்டின் கதாநாயகியாக நடிக்க, ராதிகா சரத்குமார் முக்கிய வேடத்தில் அதுவும் 23 வருடங்கள் கழித்து இந்தப்படத்தில் நடித்ததன் மூலம் மலையாள சினிமாவில் நடித்துள்ளார்.
இந்தப்படம் வரும் ஜூலை-21ஆம் தேதி (இன்று) வெளியாகும் என கடந்த மாதமே உறுதியாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அப்போதைய சூழலில் திலீப் இவ்வளவு சிக்கலில் மாட்டிக்கொண்டு சிறைக்கு செல்லும் நிலை வரும் என்பதை இவர்கள் அறிந்திருக்கவில்லை. தற்போது கேரளாவில் திலீப்பின் பெயர் டேமேஜ் ஆகியிருக்கும் நிலையில் இந்தப்படத்தை ரிலீஸ் செய்தால், அதற்கு வரவேற்பு குறைவாகவே இருக்கும் என தயாரிப்பாளர் தரப்பு உணர்ந்துகொண்டது.
அதனால் இன்னும் டெக்னிக்கல் வேலைகள் கொஞ்சம் பாக்கி இருப்பதாக கூறி இன்று ரிலீஸாக இருந்த இந்தப்படத்தை தள்ளிவைத்துள்ளார்கள். வரும் நாட்களில் திலீப்பிற்கு ஜாமீன் (ஒருவேளை) கிடைத்தால் அதன்பின்னரே படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்க முடிவு செய்துள்ளனராம்.