ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
டுவிட்டரை நாட்டின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்துங்கள், பிளவுப்படுத்தாதீர்கள் என நடிகையும், அரசியல்வாதியுமான குஷ்பு டுவிட்டரில் பதிவிட்டதோடு, டுவிட்டருக்கு குட்பையும் சொல்லியுள்ளார்.
சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்ட்டிவ்வாக இருப்பவர் நடிகை குஷ்பு. சினிமா முதல் அரசியல் வரை எந்த பிரச்னையாக இருந்தாலும் சளைக்காமல் பதிலடி கொடுப்பவர். இதனால் அவ்வப்போது சண்டைகளும், சச்சரவுகளும் கூட எழும். ஆனால் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்து டுவிட்டரில் ஆக்டிவ்வாக செயல்பட்டு வந்தார். இந்நிலையில் திடீரென டுவிட்டரை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார் குஷ்பு.
இதுகுறித்து குஷ்பு தன் டுவிட்டர் பக்கத்தில் கூயிருப்பதாவது... "சிறிதுகாலம் டுவிட்டரை விட்டு ஒதுங்கி இருக்க விரும்புகிறேன். டுவிட்டருக்கு அடிமையாகிவிட்டது போன்று உள்ளது. மீண்டும் புத்தகங்கள் படிக்க செல்கிறேன். ஆனால் நிச்சயம் திரும்ப வருவேன். ஏனென்றால் என் வாழ்க்கை திறந்த புத்தகம் போன்றது. இத்தனை நாள் ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி. நான் இதில் இல்லையென்றாலும் நீங்கள் அதை தொடர்வீர்கள் என நம்புகிறேன். இந்த தளத்தை நாட்டை முன்னேற்ற பயன்படுத்துங்கள், மாறாக பிளவுப்படுத்த பயன்படுத்தாதீர்கள். கோபங்களை மறந்து அனைவரிடம் அன்பை செலுத்துங்கள்". இவ்வாறு குஷ்பு கூறியுள்ளார்.
குஷ்புவை டுவிட்டரில் 9.85 லட்சம் பேர் பின் தொடருகிறார்கள்.