மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் |
மலையாள நடிகர் திலீப், நடிகையை ஆள்வைத்து கடத்தி பாலியல் சித்தரவதைக்கு ஆளாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு ஆலுவா சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் இரண்டு நாள் போலீஸ் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட திலீப்பிடம் நேற்று மாலைவரை போலீஸ் காவலில் விசாரணை நடந்தது.. அதன்பின் நீதிமன்றம் அனுமதித்த போலீஸ் காவலுக்கான அனுமதி நேரம் முடிந்ததும் அவர் ஆலுவா சிறைக்கு மீண்டும் அழைத்து செல்லப்பட்டார். அவர் சிறைக்கு கொண்டுவரப்பட்டபோது நேரம் மாலை 5.35 மணி..
சிறையை பொறுத்தவரை சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு 'வீக் என்ட்' என்கிற முறையில் கைதிகளுக்கு மட்டன் உணவு வழங்கப்படும்.. இதற்காக நான்கு மணிக்கே கைதிகளுக்கான ரோல்கால் நடத்தப்பட்டு யார் யாருக்கு மட்டன் தேவை என கணக்கெடுத்து, அதற்கேற்ற அளவில் தான் சமைக்கப்படுமாம். நேற்று திலீப் தாமதமாக சிறைக்கு வந்ததால் அவருக்கு மட்டன் வழங்கப்படவில்லையாம்.. சாதாரண உணவே வழங்கப்பட்டதாம். அருகில் இருந்த சில கைதிகள் தங்களுடைய மட்டன் உணவை திலீப்பிற்கு தர முன்வந்தபோதும் திலீப் அதை மறுத்துவிட்டாராம்.