ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாள சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தவர் தான் நடிகர் ஸ்ரீநாத். கடந்த 2010ஆம் ஆண்டு மோகன்லால் நடிப்பில் உருவான 'சிகார்' என்கிற படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டபோது ஹோட்டல் அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அப்போதைக்கு இந்த வழக்கு தற்கொலை என்கிற கோணத்தில் விசாரிக்கப்பட்டு அப்படியே அமுங்கியும் போனது.. ஆனால் தற்போது ஏழு வருடங்கள் கழிந்த நிலையில் ஸ்ரீநாத் மரணம் தற்கொலையல்ல, அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என சில தகவல்கள் வெளியாகின. இதனை தொடர்ந்து ஸ்ரீநாத்தின் வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என அவரது சகோதரர் சத்யநாத் என்பவர் கேரள முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளாராம்.
இவரது மரணம் கொலையாக இருக்கலாம் என சந்தேகிப்பதற்கு சத்யநாத் சில காரணங்களை முன் வைத்துள்ளார். ஸ்ரீநாத்தின் கொலையில் சினிமா பிரபலங்கள் சிலருக்கு பங்கிருக்கலாம் என்று அப்போது சொல்லப்பட்டதாம். அதற்கேற்றவாறு ஸ்ரீநாத்தின் இறுதி ஊர்வலத்தில் மலையாள நடிகர் சங்கத்தை சேர்ந்த பிரதிநிதிகள் ஒருவர் கூட கலந்துகொள்ளவில்லையாம். தவிர மறைந்த மலையாள நடிகர் திலகன் கூட, ஸ்ரீநாத் கொலை செய்யப்பட்டார் என தன்னிடம் சிலர் சொன்னதாகவும், ஆனால் பயம் காரணமாக அவர்கள் போலீஸில் உண்மையை சொல்ல முன்வரவில்லை என்றும் அப்போதே சொல்லிவந்தார் எனவும் சத்யநாத் கூறியுள்ளார்.