ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகர் திலீப்பின் பழிவாங்கும் சுபாவம் காரணமாக 'த்ரிஷயம்' புகழ் நடிகரான கலாபவன் சாஜனின் வில்லன் வாய்ப்பு பல வருடங்களுக்கு முன்பே பறிக்கப்பட்டது என ஒரு செய்தி நேற்று முதல் உலாவர ஆரம்பித்தது. ஆனால் அந்த செய்தியில் துளியும் உண்மையில்லை என மறுப்பு தெரிவித்துள்ளதுடன், நடந்தது என்ன என விளக்கமும் அளித்துள்ளார் காமெடி மற்றும் குணச்சித்திர நடிகராக வலம் வரும் நடிகர் கலாபவன் சாஜன்..
“குஞ்சுக்கூனன் படத்தில் 'கேங்ஸ்டர் வாசு' என்கிற வில்லன் வேடத்தில் நடிக்க ஆடிசன் நடந்தது. அதில் நானும் கலந்து கொண்டேன்.. ஆனால் இரண்டு நாட்கள் கழித்து படத்தின் இயக்குனர் என்னை போனில் அழைத்து, அந்த கேரக்டருக்கு நடிகர் சாய்குமாரை ஒப்பந்தம் செய்ததாக கூறினார். நானும் அந்த கேரக்டர் நமக்கு கிடைக்கவில்லை என மனதை திருப்திப்படுத்திக் கொண்டேன்.. ஆனால் படம் பார்த்தபோதுதான் அந்த கேரக்டர் சாய்குமாருக்கென அளவெடுத்து தைத்த சட்டை போல இருந்ததையும், அதில் நான் நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்காது என்பதையும் உணர்ந்தேன்.. ஆக, அந்தப்படத்தில் நான் நடிக்காததில் திலீப்புக்கு துளியும் சம்பந்தம் இல்லை” என கூறியுள்ளார் கலாபவன் சாஜன்.
மேலும் தனக்கு திலீப் வாய்ப்புகளை வழங்கி உதவி தான் செய்துள்ளார் என்றும் கூறியுள்ளார் சாஜன். “ரன்வே, மாயமோகினி ஆகிய படங்களில் நடிக்க திலீப் மூலமாகத்தான் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. ஜீத்து ஜோசப் இயக்கிய 'மை பாஸ்' படத்திலும் அவருடன் நடித்தேன். அதல் என்னுடைய கேரக்டரை இன்னும் மெருகேற்றும்படி அவரே இயக்குனருடன் கலந்து பேசினார். எனக்கான வாய்ப்புகள் இருந்ததால், அடுத்தடுத்து சில படங்களில் என்னை தன்னுடன் இணைத்துக் கொண்டார். அவரால் இதுநாள் வரை நான் எந்த விதமாகவும் மனவருத்தத்திற்கு ஆளானதில்லை” என குறிப்பிட்டுள்ளார் கலாபவன் சாஜன்..
“ஒரு நடிகர் புகழின் உச்சியில் இருக்கும்போது அவரை தூக்கி வைத்து கொண்டாடுவதும், அவருக்கு சோதனைக்காலம் வரும்போது இப்படி வசைபாடுவதும் எல்லோருக்கும் நடப்பது தான். ஆனால் நான் அவர் நல்லவர் என்றோ கெட்டவர் என்றோ சொல்லப்போவதில்லை. நீதி நிலைநாட்டப்படட்டும் என்பது தான் என் விருப்பமும்” என முடித்துள்ளார் கலாபவன் சாஜன்.