ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்து அதிலும் வெற்றி பெற வேண்டும் என நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். நடிகர், நடன இயக்குநர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவர் லாரன்ஸ். சினிமாவில் மட்டுமல்லாது தனது அறக்கட்டளை மூலமாக நிறைய உதவிகளையும் செய்து வருகிறார். சமீபத்தில் கூட ஜல்லிக்கட்டு போராட்டில் நேரடியாக கலந்து கொண்டு போராட்டக்காரர்களுக்கு உதவி செய்ததோடு, எதிர்காலத்தில் தானும் அரசியலுக்கு வருவேன் என்பது போன்று பேசினார்.
இந்நிலையில், சென்னையில், விவசாயிகள் கூட்டியக்கத்துடன் இணைந்து 6 - 8 அடி உயரமுள்ள 1.5 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி துவங்கியது. இதை லாரன்ஸ் துவக்கி வைத்தார்.
பின்னர் பேசிய லாரன்ஸ், "நடிகர்கள் விஜய், சிம்பு, தமன்னா ஆகியோர் குடிசைப்பகுதி குழந்தைகள் முன்னேற்றத்திற்கு தனது Do something திட்டத்திற்கு உதவுகிறார்கள். சில நடிகர்கள் அமைதியாக மற்றவர்களுக்கு உதவி செய்து கொண்டிருக்கலாம், யாரையும் உதவி செய்ய வேண்டும் என்று வற்புறுத்த முடியாது. ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் அவரை பின் தொடர்வேனா என தெரியாது. ஆனால் அதிலும் அவர் வெற்றி பெற வேண்டும் என்றே விரும்புகிறேன்" என்றார்.