ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 2.ஓ படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு தற்போது காலா படத்தில் நடித்து வருகிறார். இதன் முதற்கட்ட படப்பிடிப்புகள் மும்பையில் நடந்தது. இதில் இரண்டு கட்டமாக கலந்து கொண்டு ரஜினி நடித்தார். கடந்த மாதம் 22ந் தேதி மும்பை சென்ற ரஜினி, 5 நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டு விட்டு 27ந் தேதி மும்பையிலிருந்து அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.
அங்கு தான் ஏற்கெனவே சிகிச்சை பெற்ற மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை செய்து கொண்டார். பின்னர் அங்கு சில நாட்கள் ஓய்வில் இருந்த ரஜினி நேற்று சென்னை திரும்பினார். அமெரிக்காவிலிருந்து துபாய் வந்து அங்கிருந்து நேற்று இரவு சென்னை திரும்பினார்.
ரஜினி வருவதை கேள்விப்பட்ட பத்திரிகையாளர்கள் விமான நிலையத்தில் அவருக்காக காத்திருந்தனர். ஆனால் விமானத்திலிருந்து இறங்கிய ரஜினி பத்திரிகையாளர்களின் எந்த கேள்விக்கும் பதிலளிக்காமல் வேகமாக தன் காரில் ஏறி சென்று விட்டார். இதனால் பத்திரிகையாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இன்று ஒரு நாள் வீட்டில் முழு ஓய்வெடுக்கும் ரஜினி, நாளை முதல் சென்னையில் அமைக்கப்பட்டிருக்கும் மும்பை தாராவி செட்டில் காலா படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.