ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகை பாவனா விவகாரத்தில் திலீப்புடன் சேர்த்து அவரது மனைவி காவ்யா மாதவனும் வழக்கில் இணைக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் காவ்யா மாதவன் நடத்தி வரும் நிறுவனத்தில் கூட போலீஸார் சோதனையெல்லாம் நடத்தினார்கள். இந்த இக்கட்டிலிருந்து காப்பாற்றும்படி கொடுங்கோலூர் பகவதி கோவிலுக்கு சென்று வழிபாட்டு வந்திருக்கிறார்கள் திலீப்பும், காவ்யா மாதவனும்.
நிலைமை இப்படி இருக்க, கடும் வெயிலில் ஒரு சாரல் மழை என்று சொல்லத்தோன்றும் வகையில் மெல்போர்னில் நடைபெற இருக்கும் இந்திய திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருதுக்காக காவ்யா மாதவன் நாமினேட் செய்யப்பட்டுள்ளார்.
அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில், கடந்த வருடம் வெளியாகி பிளாப் ஆன 'பின்னேயும்' படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காகத்தான் அவர் பெயரை பரிந்துரைத்துள்ளார்கள். அதுமட்டுமல்ல, மற்ற விருதுக்காக நாமினேட் செய்யப்பட்டவர்கள் முழுவதும் பாலிவுட்காரர்களாகவே இருக்க, காவ்யா மாதவன் ஒருவர் மட்டும் தான் தென்னிந்திய சினிமாவில் இருந்து பரிந்துரை செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.