சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
பிரபல தெலுங்கு நடிகர் ரவிதேஜாவின் சகோதரர் பரத் என்பவர் கடந்த பத்து தினங்களுக்கு முன்பு கார் விபத்தில் மரணமடைந்தார். ஆனால் இறந்த சகோதரரின் இறுதிசடங்கில் ரவிதேஜாவும், அவரது குடும்பத்தாரும் கலந்து கொள்ளவில்லை. அதோடு, அடுத்த நாளிலேயே ரவிதேஜா படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். இதனால் அவரைப் பற்றி பல்வேறு செய்திகள் ஆந்திர ஊடகங்களில் பரவியுள்ளன.
இந்த நிலையில், அதுகுறித்து நேற்று ரவிதேஜா ஊடகங்களுக்கு விளக்கம் அளித்துள்ளார். அதில், எனது சகோதரர் பரத் மீது எனக்கு அதிக பாசம் உண்டு. கார் விபத்தில் அவரது முகம் சிதைந்து போனது. அதை பார்க்க எனக்கோ, எனது தாயாருக்கோ சக்தி இல்லை. அதனால்தான் அவரது இறுதி சடங்களில் நாங்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. அந்த அதிர்ச்சியில் இருந்து எனது குடும்பத்தார் இன்னமும் மீளவில்லை. உண்மையான காரணம் இதுதான். அதனால் ஊடகங்கள் எங்கள் குடும்பத்தைப் பற்றி தவறான செய்திகளை வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன் என்று விளக்கம் கொடுத்துள்ளார் ரவிதேஜா.