மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
கவுதமிபுத்ரா சட்டகர்ணி படத்தை அடுத்து, பூரி ஜெகன்னாத் இயக்கத்தில், பாலகிருஷ்ணா நடித்து வரும் படம் பைசா வசூல். ஸ்ரேயா நாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் படத்தில் நடிக்கும் பாலகிருஷ்ணா, 2018ம் ஆண்டு தொடக்கத்தில் ராம்கோபால் வர்மா இயக்கும் படத்தில் நடிக்கிறாராம். இதுபற்றிய தகவலை வெளியிட்டுள்ளார் பாலகிருஷ்ணா.
அவர் விடுத்துள்ள செய்தியில், மறைந்த எனது தந்தை என்டிஆரின் வாழ்க்கை கதையில் நடிப்பது என்று இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே முடிவு செய்து விட்டேன். அந்த படத்தை யாரை இயக்க வைக்கலாம் என்பது குறித்து நடந்து வந்த பரிசீலணையில் இப்போது ராம்கோபால்வர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தெலுங்கு, இந்தியில் தயாராகும் இந்த படத்தில் இரண்டு மொழிக்கும் பரிட்சயமான பல பிரபல நடிகர், நடிகைகள் நடிக்கிறார்கள் என்று கூறியுள்ளார். மேலும், ஹிந்தியில் அமிதாப்பச்சனை வைத்து இயக்கிய சர்க்கார்-3 படம் தோல்வியடைந்ததால் சோர்ந்து போயிருந்த ராம்கோபால்வர்மா, என்டிஆரின் வாழ்க்கை கதையை படமாக்க கிடைத்த வாய்ப்பினால் உற்சாகத்தில் இருக்கிறாராம்.