ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சமீபத்தில் நடைபெற்ற மலையாள நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் நடிகர்கள் திலீப், பாவனா விவாகரம் குறித்து எதுவும் விவாதிக்கப்படவில்லை என்கிற சர்ச்சை ஒருபக்கம் இருக்க, பிரபல மலையாள இயக்குனர் வினயன் மீது நடிகர் சங்கம் விதித்திருந்த மறைமுக தடையை விலக்கிக்கொள்வதாக முடிவெடுக்கப்பட்டுள்ளதாம். இந்த தகவல் சங்க கூட்டத்தில் கலந்துகொண்ட ஒரு பிரபல நடிகையின் எஸ்.எம்.எஸ் மூலமாக இயக்குனர் வினயனுக்கு தெரியவந்துள்ளது.
'இனிமேல் வினயன் படங்களில் நம் சங்கத்தை சேர்ந்தவர்கள் நடிக்க எந்த தடையும் இல்லை” என சங்கத்தின் செயலாளரான மம்முட்டியே கூறியதாகவும் சொல்லப்படுகிறது. நடிகர் சங்கத்துடன் எப்போதுமே மோதல் போக்கை வினயன் கடைபிடித்து வந்ததால் தான் இப்டி ஒரு அதிகாரப்ப்பூர்வமற்ற தடை அவர்மீது விதிக்கப்பட்டது என்றே சொல்லப்படுகிறது.
இந்த விவரம் தெரியவந்த வினயன், “இத்தனை வருடங்கள் ஒரு படைப்பாளனாக நிறைய விஷயங்களை நான் இழந்துள்ளேன் அதை இவர்களால் திருப்பித்தர முடியுமா..? இருந்தாலும் அநீதிக்கு எதிரான என் போராட்டம் எப்போதுமே தொடரும்” என கூறியுள்ளார்...
இயக்குனர் வினயனை பொறுத்தவரை தாய்மார்கள் கண்களை குளமாக்கும் 'காசி' மாதிரி படங்களையும் எடுப்பார். குழந்தைகளை குதூகலப்படுத்தும் 'அற்புத தீவு' போன்ற படங்களையும் எடுப்பார். அதிரடி போலீஸ் படங்கள், திரில்லர் படங்கள் என வினயன் தொடாத ஏரியாக்களே இல்லை. ஆனால் இவர் மீது நடிகர் சங்கம் விதித்திருந்த மறைமுக தடையால், இவர் படங்களில் நடிக்க முன்னணி நட்சத்திரங்கள் முதற்கொண்டு ஓரளவு அறிமுகமான நடிகர்கள் வரை தயங்கவே செய்தார்கள். அதனால் தான் கடந்த சில வருடங்களாக 'ட்ராகுலா', 'லிட்டில் சூப்பர்மேன்' என தனது வண்டியை வேறு ரூட்டில் ஓட்டிக்கொண்டிருந்தார் வினயன் என்பது குறிப்பிடத்தக்கது.