ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பல வெற்றிப்படங்களைத் தயாரித்த முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான சி.வி.குமார் முதன்முறையாக இயக்கியுள்ள மாயவன் படம் ஜூலையில் வெளியாகிறது. இந்தப் படத்துக்கு தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.
சந்தீப் கிஷன், லாவண்யா திரிபாதி, டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். சி.வி.குமார் தயாரித்துள்ள மாயவன் படத்தை ஸ்டூடியோ க்ரீன் மற்றும் அபி & அபி நிறுவனம் இணைந்து வெளியிடவுள்ளார்கள்.
'மாயவன் படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து, கடந்த சில மாதங்களாக இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வந்தன. ஃபேண்டசி கதை என்பதால் மாயவன் படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் அதிகமாக இருந்ததால், நீண்ட நாட்களாக அப்பணிகள் நடைபெற்று வந்தது.
ஜூலையில் வெளியிட திட்டமிட்டு தணிக்கைக்கு படம் அனுப்பி வைக்கப்பட்டது. தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. அதைப் பற்றி சி.வி.குமார் அலட்டிக்கொள்ளவில்லை. காரணம் ஜூலை மாதம் முதல் ஜி.எஸ்.டி. அமலுக்கு வருவதால் தற்போது நடைமுறையில் இருந்து வரும் வரிவிலக்கு சலுகை ரத்து செய்யப்பட உள்ளது. எனவேதான் யு/ஏ சான்றிதழ் கிடைத்தது பற்றி அலட்டிக்கொள்ளாமல் இருக்கிறார் சி.வி.குமார்.
மாயவன் படத்தைத் தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்திருக்கும் 4ஜி என்ற படத்தை தயாரித்து வருகிறார் சி.வி.குமார். அந்தப்படத்தின் இறுதிக்கட்ட பணிகளும் நடைபெற்று வருகின்றன.