ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விஜய் நடித்த 'பைரவா', சிம்பு நடிக்கும் 'ஏஏஏ' உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியவர் சத்யா. இவர் தற்போது நடிகராகியிருக்கிறார். தான் எதற்காக நடிகரானேன் என்பதை அவரே கூறுகிறார்...
"என்னை ஒரு கிரிக்கெட் வீரராக ஆக்க வேண்டும் என்பது தான் என்னுடைய தந்தையின் கனவு. ஆனால் நானோ என்னுடைய விருப்பப்படி ஆடை வடிவமைப்பாளராகிவிட்டேன். என்னுடைய தந்தையின் கனவை நனவாக்க தற்போது நடிகராக களம் இறங்கியுள்ளேன்.
என்னுடைய இலக்கு ஆண்டுதோறும் நடைபெறும் சிசிஎல் எனப்படும் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் போட்டியில் கலந்து கொண்டு கிரிக்கெட் ஆட வேண்டும் என்பது தான். அதற்காகவே நான் நடிக்கத் தொடங்கினேன். சின்ன சின்ன கேரக்டரில் ஏழு படங்களில் நடித்திருக்க வேண்டும் என்றார்கள். அதனால் தற்போது நல்ல நல்ல கேரக்டரில் நடித்து வருகிறேன்.
ஜீவா, வெற்றிவேல், கிடாரி, பொதுவாக எம்மனசு தங்கம், ஏஏஏ, இரும்பு திரை ஆகிய படங்களில் நடித்திருக்கிறேன். இதில் 'ஏஏஏ' என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடிகை கஸ்தூரியுடன் இணைந்து நடித்திருக்கிறேன். இந்த படம் இந்த மாதம் வெளியாகிறது. இந்த படம் வெளியான பின் என்னைத் தேடி வாய்ப்புகள் வரும் என்று காத்திருக்கிறேன். விஷால் நடிக்கும் 'இரும்புத்திரை'-யிலும் நல்லதொரு கேரக்டரில் நடித்து வருகிறேன். தொடர்ந்து நடிப்பதில் கவனம் செலுத்த உள்ளேன்" என்றார் சத்யா.