ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
வெற்றிகரமாக கேரளாவில் மெட்ரோ ரயில் சேவை பிரதமர் நரேந்திர மோடியால் துவங்கி வைக்கப்பட்டுள்ளது. அதேசமயம் துவங்கியது மெட்ரோ ரயில் சேவை மட்டுமல்ல.. மெட்ரோ ரயிலின் பின்னணியில் முழுமுழுக்க உருவாக இருக்கும் அரபிக்கடலிண்டே ராணி என்கிற படத்தையும் சென்டிமென்ட் ஆக இன்றே துவங்கி இருக்கிறார்கள். ரீமா கல்லிங்கல் டைட்டில் ரோலில் நடிக்கும் இந்தப்படத்தை பிரபல இயக்குமார் எம்.பத்மகுமார் இயக்குகிறார்.
கொச்சி மக்களின் கனவான மெட்ரோ ரயில் திட்டத்தை முடக்க, அரசியல் ரீதியாக பல உள்ளடி வேலைகள் கூட நடந்தன. ஆனால் அவற்றை எல்லாம் எதிர்கொண்டு போராடி இந்த மெட்ரோ ரயில் திட்டத்தை கொச்சியில் செயல்படுத்த முழு மூச்சாக செயல்பட்டவர் தான் ஈ.சசிதரன் என்பவர். மெட்ரோ மென் என மக்களால் அன்பாக அழைக்கப்படும் இவர் கொச்சி மெட்ரோவில் ஆலோசனை குழுவில் முக்கியமான பொறுப்பு வகிப்பவர். இன்று பிரதமர் மோடியுடன் முதன்முதலாக துவங்கப்பட்ட அந்தப்பயணத்தில் அவருடன் பயணித்தவர்களில் இவரும் ஒருவர்.
இவரை பற்றியும் இவரை தனது ரோல் மாடலாக எடுத்துக்கொண்டு ஒரு பெண் எப்படி இந்த மெட்ரோ ரயில் திட்டத்தின் பிரச்சனைகளை சமாளித்து அதை சாத்தியமாக்குகிறாள் என்பதும்தான் படத்தின் கதையாம். ஈ.சசிதரன் கேரக்டரில் மிக முக்கியமான நடிகர் ஒருவர் நடிக்க இருக்கிறாராம்.