ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ரெமோ படத்தில் நடித்துக் கொண்ருந்த போதே, முன்பே சிறுத்தை சிவாவை சந்தித்து தன்னை வைத்து ஒரு படத்தை இயக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். வேதாளம் படத்தை முடித்துவிட்டு விவேகம் படத்தை இயக்கும் பணியில் உள்ளதால் அப்போது முடியாது என்று சிவகார்த்திகேயனிடம் சொன்னார் சிவா.
அதன் பிறகே தன்னுடைய அடுத்தப்படத்தை இயக்க மோகன் ராஜாவை கமிட் பண்ணினார். இந்நிலையில் ஸ்டுடியோக்ரீன் தயாரிப்பில் நடிக்க உள்ள படத்தை இயக்க சிவாவை சிபாரிசு செய்துள்ளார் சிவகார்த்திகேயன். சிறுத்தை படத்தை அடுத்து தங்களுடைய நிறுவனத்துக்கு ஒரு படம் இயக்கும்படி ஏற்கனவே சிவாவுடன் ஒப்பந்தம் போட்டு வைத்துள்ளது ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம்.
அந்த ஒப்பந்தத்தின்படி சிவகார்த்திகேயன் - சிவா கூட்டணியில் புதிய படமொன்றை தொடங்க ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, சிவகார்த்திகேயனை சந்தித்து ஒரு கதை சொன்னார் சிவா. அந்தக்கதை ஏனோ சிவகார்த்திகேயனுக்கு பிடிக்கவில்லையாம். எனவே வேறுகதை சொல்லும்படி சிவாவிடம் சொல்லப்பட்டிருப்பதாகவும் தகவல்.
இதற்கிடையில் விவேகம் படத்தை முடித்த பிறகு அடுத்தப்படத்தையும் சிவாவையே இயக்கும்படி கேட்டுக்கொண்டிருக்கிறாராம் அஜித். அதனால் சிவகார்த்திகேயன் படத்தை வேண்டாம் என்று சிவா சொல்லவும் வாய்ப்புள்ளது என்கிறார்கள். சம்பந்தப்பட்டவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை இதுபோன்ற ஏராளமான தகவல்கள் உலா வரத்தான் செய்யும்.