ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சரத்குமாரின் மகள் நடிகை வரலட்சுமி கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேவ் சக்தி என்ற அமைப்பை தொடங்கினார். இந்த அமைப்பின் மூலம் பெண்கள் பாதுகாப்பிற்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். முதல் கட்டமாக கையெழுத்து இயக்கம் நடத்தினார். மாவட்டங்கள் தோறும் மகிளா நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும் என்பது சேவ் சக்தி அமைப்பின் நோக்கங்களில் ஒன்று.
இதற்காக அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தார். இந்த நிலையில் நேற்று டில்லி சென்ற அவர் மத்திய சட்டத்துறை இணை அமைச்சர் பி.பி.சவுத்திரியை அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது தமிழகத்தில் பெண்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என்பதை எடுத்துக் கூறியும். பெண்கள் தொடர்பான பல ஆயிரம் வழக்குகள் நிலுவையில் இருப்பதை கூறியும் மாவட்டம் தோறும் மகிளாக நீதிமன்றங்கள் அமைக்க கோரிக்கை மனு அளித்தார்.
பின்னர் இது தொடர்பாக வரலட்சுமி நிருபர்களிடம் கூறியதாவது: பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை விரைவாக விசாரித்து தண்டனை வழங்கவும் ஏதுவாக மாவட்டம் தோறும் மகிளா நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும் என்ற தமிழக முதல்வரை சந்தித்து கேட்டேன். இப்போது மத்திய அமைச்சரையும் கேட்டுக் கொண்டிருக்கிறேன். உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சரும் உறுதியளித்தார் என்றார் வரலட்சுமி.