ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சமீபத்தில் மலையாள நடிகர் துல்கர் சல்மான் அழகான பெண் குழந்தைக்கு அப்பாவானார். திரையுலகில் இருந்து பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். நடிகர் விக்ரம் பிரபு, துல்கரை மச்சான் என அழைக்க கூடியவர். அவரும் அந்த நேரத்தில் துல்கருடன் மருத்துவமனையில் இருந்து உதவிகள் செய்தார். துல்கருக்கு குழந்தை பிறந்த தகவல் கேள்விப்பட்டதும் 'பாகுபலி' வில்லன் ராணா உடனே டுவிட்டரில் துல்கருக்கு வாழ்த்து சொல்லியிருந்தார். அதற்கு பதிலளித்த துல்கர், “சீஃப்.. நீங்கள் வந்தே ஆக வேண்டும். இங்கேயுள்ள இந்த குட்டிப்பொண்ணு முன்னாடி நீங்கள் வந்து நிற்கும்போது அதன் கண்களுக்கு நீங்கள் ஒரு மலைபோல தெரிவீர்கள்” என பதில் அளித்திருந்தார்..
ராணா-துல்கர் இருவரின் இந்த அன்னியோன்யமான உரையாடலை பார்த்த திரையுலக பிரபலங்களுக்கும், ஏன்.. ரசிகர்களுக்கும் கூட இவர்களது பிரண்ட்ஷிப் ஆச்சர்யத்தை தந்தது. ஆனால் இவர்கள் இருவரும் நடிக்க வருவதற்கு முன் நண்பர்கள் ஆனவர்கள் என்பது பெரும்பாலும் யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. துல்கர் சல்மான் சென்னை லயோலா கல்லூரியில் படித்தபோது நடிகர் நாகசைதன்யாவும் துல்கருடன் தான் சேர்ந்து படித்துள்ளார். அங்கே இருவருக்கும் தோன்றிய நட்பு, நாகசைதன்யாவின் உறவினரான ராணாவையும் துல்கரின் நட்பு வட்டாரத்தில் இணைத்ததாம். அன்றிலிருந்து இன்றுவரை அந்த நட்பு தொடர்ந்து வருகிறது. சமீபத்தில் ஒரு பேட்டியில் கூட, தான் துல்கர் சல்மானின் தீவிர ரசிகன் என்றும் துல்கரின் படங்களை விடாமல் பார்த்துவிடுவேன் என்றும் கூறியிருந்தார்.