ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ், மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தவர் நிவேதா தாமஸ். பின்னர் ஜெய் நடித்த நவீன சரஸ்வதி சபதம் படத்தில் நாயகியாக நடித்தார். அதையடுத்து கமலின் பாபநாசம் படத்தில் அவரது மகளாக நடித்து பிரபலமானார். அதையடுத்து தெலுங்கில் நானியுடன் ஜென்டில் மேன் என்ற படத்தில் நடித்த நிவேதா தாமஸ், தற்போது நின்னு கோரி, ஜெய் லவகுசா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இதில், நின்னுகோரி படத்தில் மீண்டும் நானியுடன் நடித்துள்ளார் நிவேதா தாமஸ். இந்த படத்தில் மிருகம் ஆதியும் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடித்திருக்கிறார். படப்பிடிப்பு முடிவடைந்து விட்ட நிலையில், தற்போது இறுதிகட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்தநிலையில், நின்னுகோரி படம் ஜூலை 7-ந்தேதி வெளியாக இருப்பதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு நானியுடன் இணைந்து நடித்த நேனு லோக்கல் சூப்பர் ஹிட்டானதால், அந்த செண்டிமென்ட் இந்த படத்திலும் தொடர்ந்து, தெலுங்கு சினிமாவில் தன்னை முன்வரிசை நடிகையாக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாக சொல்கிறார் நிவேதா தாமஸ்.