ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இயக்குனர் பாண்டிராஜ் தனது பசங்க புரொடக்ஷன் மூலம் தயாரிக்கும் படம் செம. அவரது உதவியாளர் வள்ளிகாந்த் இயக்குகிறார். ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார். எம்.எஸ்.விவேகானந்தன் ஒளிப்பதிவு செய்கிறார். தொண்டன் படத்தில் சமுத்திரகனி தங்கையாக நடித்த அர்த்தனா ஹீரோயினாக நடிக்கிறார். படம் பற்றி இயக்குனர் வள்ளிகாந்த் கூறியதாவது:
ஒரு கிராமத்து கல்யாண வீட்டில் நடக்கும் கலாட்டாக்களை மையமாக வைத்து உருவான காமெடி படம். திருமண வீட்டில் பந்தக்கால் நடுவதிலிருந்து மாப்பிள்ளையும் பெண்ணும் மறுவீடு செல்வது வரையிலான கதை. என் நண்பன் திருமணத்தில் நடந்த கலாட்டாக்களை ஒரு நாள் பாண்டிராஜ் சாரிடம் சொன்னேன். அவர் விழுந்து விழுந்து சிரித்தார், திடீரென இதை அப்படியே ஸ்கிரிப்ட்டு பண்ணேன் நானே படத்தை தயாரிக்கிறேன் செமயாக இருக்கும் என்றார். செம என்பது அவர் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை. அதையே அப்படியே படத்தின் தலைப்பாக வைத்து விட்டோம்.
மைக்கில் பேசி காய்கறி விக்கிற நவீன வியாபாரி குழந்தைவேலு. ஊர் ஊராக சென்று காய்கறி விற்பதால் அவனுக்கு பெண் கிடைப்பதில் சிக்கல். ஜோஷியரை போய் பார்க்கிறான். இன்னும் 3 மாதத்தில் கல்யாணம் நடந்தாகணும் இல்லேன்னா கல்யாணமே ஆகாது என்பார். அதனால் அவசர அசரமாக அர்த்தனாவை பார்த்து கல்யாண ஏற்பாடு செய்வார். அதில் ஏகப்பட்ட பிரச்சினை வரும் அதை சமாளித்து எப்படி கல்யாணம் பண்ணுகிறார் என்பதுதான் கதை.
ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள படங்களில் முக்கியமான படமாக இருக்கும். முற்றிலும் கிராமத்து இளைஞனாக நடித்திருக்கிறார் ஆபாச காட்சியோ டபுள் மீனிங் வசனமோ கிடையாது. காமெடி, எமோசன் இரண்டுக்கும் முக்கியத்தும் கொடுத்து உருவாகி இருக்கிறது. நாளை (9ந் தேதி) பாடல்களை வெளியிடுகிறோம். அடுத்த மாதம் படத்தை வெளியிடுகிறோம். என்றார்.