மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
சுற்றுப்புற சூழல் தினத்தை முன்னிட்டு கேரள அரசு மாநிலம் முழுவதும் ஒரு கோடி மரக்கன்றுகளை நடும் திட்டத்தை நேற்று துவங்கி வைத்தது. சமூக மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தவிர திரையுலக பிரபலங்களும் இந்த மரம் நடுதல் நிகழ்ச்சியில் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். மோகன்லால் தான் தற்போது நடித்துவரும் 'வெளிப்பாடிண்டே புத்தகம்' படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் கல்லூரி வளாகத்திலேயே மரம் நடும் பணியை துவக்கி வைத்தார்.
இன்னொரு பக்கம் மெகாஸ்டார் மம்முட்டியும் மரம் நடும் பணிகளில் ஆர்வம் காட்டி களத்தில் இறங்கினார். பள்ளி மாணவிகளுடன் மரம் நடும் பணியில் இறங்கிய அவர் மரம் நடுதலின் அவசியத்தையும் சுற்றுப்புற சூழலை பாதுகாக்க வேண்டியதன் விழிப்புணர்வையும் விளக்கினார். இப்போது மட்டுமல்ல கடந்த 2014ல் கூட எல்லோரும் வட்டார் பக்கெட் சேலஞ்ச் விட்டுக்கொண்டிருந்தபோது, மம்முட்டியோ மரக்கன்றுகளை நட்டுவைத்து 'மை ட்ரீ சேலஞ்ச்' என சக திரையுலக பிரபலங்களுக்கு சவால் விட்டார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.