ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஸ்ரேயா ஸ்ரீ மூவிஸ் LLP தயாரிப்பில் பாரதிராஜா, விதார்த் நடிப்பில், நித்திலன் இயக்கத்தில், அஜனீஷ் லோக்நாத் இசையில் உருவாகி இருக்கும் படம் “குரங்கு பொம்மை”. இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் பேசிய பார்த்திபன், தன் குருவின் குருவான பாரதிராஜாவை குரங்கு என்று வித்தியாசமாக பாராட்டினார்.
பார்த்திபன் பேசுகையில், "பாரதிராஜாவை பாராட்டுவதற்கு வாழ்நாள் போதாது. தமிழ்சினிமா ஒட்டுமொத்தமாக பாரதிராஜாவுக்கு ஒரு பெரிய பாராட்டுவிழா எடுக்க வேண்டும். இந்த படத்தின் தலைப்பு ரொம்ப வித்தியாசமாக இருக்கிறது. பாரதிராஜாவையும் வித்தியாசமாக பாராட்ட ஆசைப்படுகிறேன். பாரதிராஜா நல்ல இயக்குநர், சிறந்த மனிதர் என்று எல்லோரும் சொல்வாங்க. ஆனால், நான் என்ன சொல்கிறேன்னா பாரதிராஜா ஒரு சிறந்த “குரங்கு”. குரங்கு நான்கு எழுத்து. கு- நல்ல குணவான், ர - சிறந்த ரசனையாளர், ங் - இங்கிதம் தெரிந்தவர், கு - குவாலிட்டியானவர். இதுதான் அந்த குரங்குக்கு அர்த்தம் என்று பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் பாரதிராஜா, எஸ்.வி.சேகர், பார்த்திபன், இயக்குநர் தரணி, நடிகர்கள் சிபிராஜ், விதார்த், மைம்கோபி, தயாரிப்பாளர்கள் பி.எல்.தேனப்பன், ஞானவேல்ராஜா, டான்ஸ் மாஸ்டர் ராதிகா, ஸ்ரேயா ஸ்ரீ மூவிஸ் LLP நிறுவனத்தின் நிர்வாக தயாரிப்பாளர் கண்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.