ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
இந்தி டெலிவிஷன் தொடர்களில் நடித்து வந்தவர் அவந்திகா ஷெட்டி, மங்களூரைச் சேர்ந்த இவர் ரங்கி தாரங்கா என்ற படத்தின் மூலம் கன்னட சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு கல்பனா 2 படத்தில் நடித்தார். தற்போது ராஜா ராதா படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ராஜு கன்னடா மீடியம் என்ற நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை.
25 சதவிகித படப்பிடிப்புகள் முடிந்து விட்ட நிலையில் தயாரிப்பாளர் சுரேஷ், அவந்திகாவை படத்திலிருந்து நீக்கிவிட்டதாக அறிவித்தார். இதையடுத்து அவந்திகா, தயாரிப்பாளர் சுரேஷ் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கன்னட சினிமா வர்த்தக சபையில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து தனது பேஸ்புக்கில் அவந்திகா கூறியிருப்பதாவது: தயாரிப்பாளர் தொடர்ந்து எனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் அவரை கண்டித்தேன். அத்து மீறி நடக்க முயன்றார். கோபத்தை காட்டினேன். அதனால் என்னை படத்திலிருந்து நீக்கி விட்டார். என்று தெரிவித்துள்ளர்.
ஆனால் இந்த குற்றச்சாட்டை தயாரிப்பாளர் சுரேஷ் மறுத்துள்ளார். "அவந்திகாக படப்பிடிப்புக்கு சரியான நேரத்துக்கு வருவதில்லை. எல்லோரிடமும் ஏதாவது ஒரு காரணத்திற்காக சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். அதனால் அவரை நீக்கினேன்" என்கிறார் தயாரிப்பாளர் சுரேஷ்.