Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜூலையில் ரஜினி தனிக்கட்சி : ரஜினியின் அண்ணன் பேட்டி

27 மே, 2017 - 10:28 IST
எழுத்தின் அளவு:
Rajini-will-launch-new-party-in-July-says-his-borther

ஜூலை மாதம் ரஜினியின் புதிய கட்சி உருவாகும், தமிழ்நாட்டில் புதிய அரசியல் சகாப்தம் மலரும் என ரஜினியின் அண்ணன் சத்யநாராயணராவ் கெய்வாட் தெரிவித்துள்ளார்.


ரஜினி அரசியலுக்கு வருவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அதை நேரடியாக சொல்லாவிட்டாலும் ரசிகர்கள் சந்திப்பு மூலமும், ரசிகர்களிடத்தில் போருக்கு தயாராகுங்கள் என்று கூறியுள்ளார். இவை எல்லாவற்றையும் பார்க்கும்போது அவரது அரசியல் பிரவேசம் உறுதியாகியுள்ளது.


ஏற்கனவே கட்சி தொடர்பாக கொடி, சின்னம் உள்ளிட்ட வேலைகள் நடந்து வருவதாக நாம் ஏற்கனவே சொல்லியிருந்தோம், அதோடு சுதந்திர தினத்தில் ரஜினியின் புதிய கட்சி மலரும் என்று சொல்லியிருந்தோம். இந்நிலையில் ஜூலை மாதமே ரஜினியின் புதிய கட்சி உருவாகும் என ரஜினியின் அண்ணன் சத்யநாராயணராவ் கெய்வாட் தெரிவித்துள்ளார்.


பெங்களூரில் சத்யநாராயணா அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது... ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். அரசியல் பிரவேசம் பற்றி ரஜினி தனது நண்பர்கள், குடும்பத்தார்கள், நெருக்கமான வட்டாரத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். ரசிகர்களுடனான முதல் சுற்று சந்திப்பு முடிந்துள்ளது. அவர்களுடன் பேசி வருகிறார். ஜூன் மற்றும் ஜூலைக்குள் எவ்வளவு ரசிகர்களை சந்திக்க முடியுமோ, அவ்வளவு ரசிகர்களையும் சந்தித்து விட்டு புதிய கட்சி அறிவிப்பை வெளியிடுவார்.


ரஜினி அரசியலுக்கு வருவதன் முக்கிய நோக்கமே ஊழலை ஒழிப்பது தான். அரசாங்கம் மக்களுக்கு எவ்வளவோ பல நல்ல திட்டங்களை கொண்டு வருகிறது, ஆனால் அது முழுமையாக மக்களை சென்றடைவதில்லை. இந்த கவலை ரஜினிக்கு எப்போதும் உண்டு. இதையெல்லாம் சரி செய்யத்தான் அவர் அரசியலுக்கு வருகிறார். அப்படி அவர் அரசியலுக்கு வரும்போது தமிழ்நாட்டில் புதிய அரசியல் சகாப்தம் மலரும். ரஜினி இப்போதைக்கு எந்த கட்சியிலும் சேர மாட்டார். கட்சி கொடி, சின்னம் போன்றவற்றுக்காகன வேலைகள் நடந்து வருகின்றன.


இவ்வாறு சத்யநாராயணராவ் தெரிவித்துள்ளார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in