ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் தற்போது பிசியான நடிகர் ஆகிவிட்டார். தாரை தப்பட்டையில் வில்லனாக அறிமுகமானவர் தற்போது தனிமுகம், பில்லா பாண்டி, வேட்டைநாய் படங்களில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார். மன்னாரு படத்தை இயக்கிய ஜெய்சங்கர் இயக்கும் படம் வேட்டைநாய், சுபிக்ஷா ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்தின் 50 சதவிகித படப்பிடிப்புகள் முடிந்திருக்கிறது. இந்த நிலையில் ஆர்.கே.சுரேஷின் பிறந்த நாளான நேற்று இயக்குனர் பாலா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார்.
படம் பற்றி ஆர்.கே.சுரேஷ் கூறியதாவது: வேட்டை நாயின் கதையை கேட்டதுமே மற்ற படங்களின் தேதியை அட்ஜெட்ஸ் செய்து கொடுத்தேன். தற்போது 9 படங்களில் நடித்து வருகிறேன். அதில் பில்லா பாண்டி மட்டுமே எனது தயாரிப்பு, மற்றவை வேறு தயாரிப்பாளர்கள் தயாரிப்பது. ஒரு நடுத்தர நகரத்தில் நடக்கும் கதை. ஊரையை மிரட்டி உருட்டி வாழ்கிற ஒரு தாதாவுக்கு திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள். வேட்டை நாயாக இருந்தவன் திருமணத்துக்கு பிறகு வீட்டு நாயாக மாறுகிறார். மனைவியின் அன்புக்கு கட்டுப்படுகிறான். ஆனால் இந்த சமூகம் அவனை மீண்டும் வேட்டை நாயாக மாற்றுகிறது. முன்பை விட வெறிகொண்ட வேட்டை நாயாகிறான். புதிய பாதை, நந்தா மாதிரியான கதை. 50 சதவிகித படப்பிடிப்பு முடிந்து விட்டது. அடுத்த கட்ட படப்பிடிப்புகள் அடுத்த வாரம் நடக்க இருக்கிறது. என்றார் ஆர்.கே.சுரேஷ்.