ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
தனது தந்தை சிரஞ்சீவி நடித்த கைதி எண் 150 படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடிய ராம்சரண் தேஜா, தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறார். சுகுமார் இயக்கும் இந்த படம் ஜூலை 7-ந்தேதி திரைக்கு வர இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டதால் இரவு பகலாக படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறாராம் ராம்சரண். இப்படத்தில் அவருடன் சமந்தா, அனுபமா பரமேஸ்வரன் நடித்திருக்கிறார்கள். முக்கியமாக இந்த படத்தில் வழக்கமான சமந்தாவாக இல்லாமல் ஒரு மாறுபட்ட ரோலில் அவர் நடித்திருக்கிறாராம்.
அதேபோல் இந்த படத்தில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் பிரகாஷ்ராஜ் நடித்து வருகிறார். சமீபகாலமாக வில்லன் வேடங்களை விட வித்தியாசமான குணசித்ர வேடங்களிலேயே நடித்து வரும் பிரகாஷ்ராஜ், இந்தப்படத்தில் ஒரு வயதான கெட்டப்பில் நடித்திருக்கிறாராம். கதையின் முதுகெலும்பாக பிரகாஷ்ராஜின் வேடம் அமைந்துள்ளதாம். மேலும், சிரஞ்சீவி நடிக்கும் 151 படத்தை தயாரிக்கும் ராம்சரண்தேஜா, இந்த படத்தை முடித்துக்கொடுத்த பிறகுதான் அந்த படத்தின் பிரீ புரொடக்சன்ஸ் வேலைகளை தொடங்குகிறாராம்.