ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கிட்டத்தட்ட 21 வருட கனவு இன்றுதான் நனவாகி இருக்கிறது மலையாள இயக்குனர் லால் ஜோசிற்கு.. ஆம்.. 1998ல் மம்முட்டி நடித்த ஒரு மருவத்தூர் கனவு' படத்தை இயக்கியபின் அடுத்தது எப்போது மோகன்லால் படத்தை இயக்கப்போகிறார் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாகவும் இருந்தது.. இத்தனைக்கும் லால்ஜோசின் குருவான இயக்குனர் கமல் இயக்கிய 'விஷ்ணுலோகம்' படத்தில் அசிஸ்டன்ட் டைரக்டராக பணியாற்றிய லால்ஜோசை பார்த்து இவர் மிகப்பெரிய இயக்குனராக வருவார் என ஆருடம் சொன்னவர்தான் மோகன்லால்.. சொன்னபடியே பெரிய ஆளாக வளர்ந்தும் விட்டார் லால் ஜோஸ்.
ஆனால் ஏனோ தெரியவில்லை இத்தனை நாட்களாக இந்த கூட்டணி ஏனோ சில காரணங்களால் ஒன்று சேரவே முடியாமல் போனது. தற்போது இருவருக்கும் இடையேயான பனித்திரை விலகி, இதோ மோகன்லால் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பை இன்று துவக்கியும் விட்டார் லால் ஜோஸ். கேரளாவில் தும்பாவில் உள்ள செயின்ட் சேவியர் கல்லூரியில் தான் படப்பிடிப்பு நடைபெறுகிறது.. இதன் துவக்க நாளான இன்று கல்லூரி முழுவதும் நிறைய மரக்கன்றுகளை நட்டுவைத்து படப்பிடிப்பை துவங்கியுள்ளனர். இந்தப்படத்தில் மோகன்லால் கல்லூரி ஒன்றின் வைஸ்பிரின்சிபாலாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.