ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இயக்குனர் தங்கர் பச்சானுக்கு , பாடலாசிரியர் வைரமுத்து மீது அப்படி என்ன கோபமோ தெரியவில்லை, சென்னை - வடபழனி கமலா திரையரங்கில் நடைபெற்ற "கொள்ளைக்காரன்" படத்தின் ஆடியோ சி.டி.வெளியீடு விழாவின் மேடையில் வைரமுத்து நடுநாயகமாக வீற்றிருந்த வேளையில் பேச வந்தார்கள்..
வழக்கம்போலவே, தமிழனுக்கு தமிழ்நாட்டிலேயே அங்கீகாரம் இல்லை.... இந்தியாவுல சுத்தமா தமிழகர்களுக்கு எந்த உரிமையும் தரப்படுவதில்லை.... ஒரு பக்கம் திருட்டு வி.சி.டி., தொல்லை.... மற்றொரு பக்கம் படம் ரிலீஸ் ஆன ஒரு மணி நேரத்தில் முழுபடத்தையும் திருட்டுத்தனமாக ஒலி-ஒளி பரப்பி வரும் இணையதளங்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழ்நிலை. அதனால இந்த மாதிரி ஆடியோ ரிலீஸ் எல்லாம் சுத்த வேஸ்ட்! படம் எடுக்கிற எந்த ஒரு தயாரிப்பாளும் சந்தோஷமா இல்லை.... இது மாதிரி சினிமாவுக்கு பல தொல்லைகள் என்றால்., தமிழனுக்கு., காவிரிப் பிரச்னை, முல்லைப்பெரியாறு பிரச்னை, ஈழத்துல அப்பாவி தமிழர்கள் கொல்லப்படும் சூழல்., இது எல்லாவற்றையும் மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருக்கிறது!
அதனால., அவங்க கோட்டு சூட்டு போட்டுக்கிட்டு தேசிய விருது கொடுக்கிறேன்னு கூப்பிட்டா தமிழ் சினிமாக்காரன் யாரும் போகக்கூடாது.... அப்படியே போனாலும் அதை அவங்க மூஞ்சிலேயே கிடாசிட்டு வரணும். இது வரை அந்த விருதினை வாங்கியவர்களும் அவற்றை திருப்பி கொடுத்திட்டு எதிர்ப்பு காட்டணும்! எனக்கு தேசிய விருது கிடைச்சிருந்தா இதைத் தான் நான் செய்வேன்.தமிழ் சினிமாக்காரர்களுக்கு தேசிய விருது கவுரமில்லை...அவமானம் என்றார்.
அவரைத் தொடர்ந்து பேச வந்தார் ஐந்தாறு தேசியவிருதுகள் வாங்கியுள்ள வைரமுத்து., இதுமாதிரி விழாக்களோ, மேடைகளோ வேண்டாம் என்றார் தங்கர்பச்சான். அதுதவறு இது மாதிரி மேடை கிடைப்பதால் தானே தங்கர்பச்சானால் எது மாதிரி வேண்டுமானாலும் பேசமுடிகிறது. நாமும் கேட்டுத் தொலைக்க வேண்டியுள்ளது "டைமண்டு" (வைரம்) கவிஞர் தேசிய விருதுகளை மத்திய அரசிடம் ரிட்டர்ன் கொடுப்பது குறித்து தங்கர்பச்சான் பேசிய பேச்சுக்கு பதிலேதும் கூறாமல் எஸ்கேப் ஆனது செம காமெடி!