ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சூப்பர் ஸ்டார் ரஜினி தனது ரசிகர்களை சந்தித்துப் பேசினார். திருவண்ணாமலை, சிவகங்கை, விழுப்புரம் மாவட்ட ரசிகர்கள் ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். நேற்றைய நிகழ்வில் ரசிகர்கள் பலர் தங்கள், மனைவி, காதலி ஆகியோருடன் வந்து புகைக்பபடம் எடுத்துக் கொண்டது சிறப்பு அம்சம். ரஜினி நாற்காலியில் அமர்ந்திருக்க பெரும்பாலான ரசிகர்கள் தரையில் அமர்ந்து புகைப்படம் எடுத்தனர். சிலர் அவர் கையை தூக்கி தங்கள் தோளின் மீது வைத்துக் கொண்டனர். சிலர் பாபா முத்திரை காட்டினார். 9 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சி 11 மணிக்கு நிறைவடைந்தது. அதன் பிறகு மதிய விருந்து சாப்பிட்டு தங்கள் ஊர்களுக்கு கிளம்பினர்.
நேற்றைய நிகழ்வின்போது பத்திரிகையாளர்கள் சிலருடனும் ரஜினி போட்டோ எடுத்துக் கொண்டார் பின்னர். முதல் நாள் பேசிய அரசியல் பற்றிய கருத்து வெளியில் விமர்சிக்கப்படுவது பற்றி பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு "அரசியலில் நுழைவது பற்றி நான் பேசிய கருத்தில் எந்த மாற்றமும் இல்லை. தற்போதுள்ள நிலையில் அதுபற்றி மேலும் பேச விரும்பவில்லை. விமர்சிப்பவர்கள் எப்போதும் விமர்சித்துக் கொண்டேதான் இருப்பார்கள். நான் இப்போது ரசிகர்களோடு மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த சந்திப்பு முடிந்ததும் மேலும் 15 மாவட்டங்கள் இருக்கிறது. இதுபோன்று அதற்கும் நேரம் ஒதுக்கி அவர்களையும் சந்திப்பேன். என்றார்.
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ரஜினியை அரசிலுக்கு அழைத்திருப்பது பற்றியும், சுப்பிரமணியசாமி வரக்கூடாது என்று கூறியிருப்பது பற்றியும் கேட்டதற்கு பதிலளிக்க மறுத்து விட்டார்.